![vijay (3) (1) - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/10/vijay-3-1-1.jpg)
CINEMA
இறந்த மகளை விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி கண்முன்னே கொண்டு வந்த நபர்… வைரலாகும் எமோஷனல் வீடியோ…
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகளான மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. மகளை இறந்த சோகத்தில் வாடினாலும் திரையுலகிலும் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் கூட ரத்தம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தனது இளைய மகளுடன் கலந்து கொண்டார்.
நடிகர் விஜய் ஆண்டனி இறந்த தனது மகள் மீரா குறித்து சோசியல் மீடியாவில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’ என குறிப்பிட்டுட்டிருந்தார்.இந்த பதிவானது அனைவரது மனதையும் கலங்கடித்தது.
இவரைத்தொடர்ந்து அவரது மனைவி பாத்திமா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘நீங்கள் 16 வருடங்கள் மட்டுமே வாழ்வீர்கள் என்று எனக்குத் தெரிந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகில் வைத்திருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உன்னைக் காட்டாமல் வளர்த்திருப்பேன். உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன். நீ இல்லாமல் வாழ முடியாது. அம்மா அப்பாவிடம் திரும்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். அன்பு தங்கம் மீரா’ எனக் கூறியிருந்தார்.
இப்படி மகளை பிரிந்து விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி வாடி வரும் இந்த வேளையில் ஓவியக்கலைஞர் ஒருவர் விஜய் ஆண்டனி, அவரது மனைவி , மீரா மற்றும் லாரா நான்கு பேரும் இருக்குமாறு அழகிய ஓவியம் ஒன்றை வரைந்து அதை சர்ப்ரைஸாக அவர்களிடம் காட்ட, நடிகர் விஜய் ஆண்டனி மனைவி கண்கலங்கி அழுதுவிட்டார். இந்த மனதை கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram