CINEMA
மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறது உண்மை இல்ல.. இந்த சீசன் டைட்டில் வின்னர் இந்த பெண் போட்டியாளர் தானா.. BB சீக்ரெட்டை உடைத்த பிரபலம்..
கடந்த 2017ம் ஆண்டில் இருந்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ஆரவ், முகின், ஆரி, ராஜூ, அசீம் மற்றும் ரித்விகா ஆகியோர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர். டைட்டில் வின்னரில் இந்த 6 பேரில் ரித்விகா ஒருவர் மட்டுமே பெண் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் வழங்கப்படுவதில்லை என்று குறை இருந்து வருகிறது. அதனால் இந்தமுறை பெண் போட்டியாளர்களில் ஒருவர்தான் வின்னர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் வித்தகன் கூறியதாவது, பிக்பாஸ் பொருத்தவரை மக்கள் ஓட்டுப் போட்டுதான் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டமல் தயாரிப்பு நிறுவனங்கள், விஜய் டிவியும் சேர்ந்துதான் பிக்பாஸ் டைட்டில் வின்னரை தீர்மானம் செய்கிறது. அதற்கேற்ப ஒரு சில போட்டியாளர்களின் மோசமான குணங்களையும், ஒரு சில போட்டியாளர்களின் கெட்ட குணங்களையும் தினமும் ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து காட்டப்படுகிறது. இதில் பார்வையாளர்களின் ரியாக்ஷனை பொருத்து அந்த வாரத்தில் வெளியேற்ற வேண்டிய போட்டியாளரை, விஜய் டிவி தீர்மானித்து வெளியே அனுப்புகிறது.
இதுவரை பிக்பாஸ் போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அனைவருமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அதனால், 35 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்களையும் பிக்பாஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக, இந்த முறை பெண் போட்டியாளர் விசித்ரா வைதான், விஜய் டிவி டைட்டில் வின்னராக அறிவிக்க உள்ளது. அதற்கேற்ப அவரது மரியாதையை உயர்த்தும் விதமாக, 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் விவகாரத்தை, விசித்ராவை நிகழ்ச்சியில் பேச வைத்து, பார்வையாளர்களின் மொத்த பார்வையை அவரது பக்கம் திருப்பியது. இதன்மூலம் ஆண் போட்டியாளர்களுக்கு மட்டுமே டைட்டில் வின்னர் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தீரும் என்பதால், இந்த முடிவில்தான் விஜய் டிவி உள்ளது, என வித்தகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.