“அசந்து தூங்கிய நபர்…” சட்டைக்குள் புகுந்து படமெடுத்து ஆடிய ராஜநாகம்…! கொஞ்சம் அசைந்தால் எல்லாம் போச்சு…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

ஆடு மேய்ப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்ற ஏழை நபர் ஒருவர், களைப்பு காரணமாக அங்குள்ள மரத்தடியில் அசந்து தூங்கியுள்ளார். அந்தச் சமயத்தில், எதிர்பாராத விதமாகப் பிரம்மாண்ட ராஜநாகப் பாம்பு ஒன்று அவரது சட்டைக்குள் புகுந்து, அவரது முகத்திற்கு மிக அருகில் வந்து படம் எடுத்து நின்றுள்ளது. சிறிதளவு அசைந்தாலும் பாம்பு தீண்டிவிடும் என்ற அச்சத்தில், அந்த நபர் மூச்சடக்கிக் கொண்டு சற்றும் அசையாமல் திகிலுடன் மரண பயத்தில் கிடந்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த அதிர்ச்சித் காட்சியைக் கண்டு உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மிகக் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட்டு, அந்த நபரின் சட்டைக்குள் இருந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பாக வெளியே எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர். மழைக்காலத்தில் காடுகள், புதர்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகே கவனக்குறைவாகத் தூங்கக் கூடாது எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.