CINEMA
திடீரென்று யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்.! இவர்தான் மாப்பிள்ளையா.?
சரத்குமார் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தற்போது யாரிடமும் தெரிவிக்காமல் மிக எளிமையாக நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள். முதல் முதலில் வாழ்க்கையை பாடி பில்டிங் மற்றும் பத்திரிக்கை துறையினராக ஆரம்பித்த சரத்குமார் அவர்கள், அதன் பின்பு சினிமாவில் ஆர்வம் கொண்டு,
1986 ஆம் ஆண்டு “சமச்சாம்லோ இஸ்திரி” என்ற படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சின்ன பூவே மெல்ல பேசு, கண் சிமிட்டும் நேரம், நாட்டாமை போன்ற ஹிட் படங்களை கொடுத்து விட்டு. அரசியலில் இறங்கி (அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி) என்று ஆரம்பித்து நடத்தி வருகிறார். 1984 ஆம் ஆண்டு “சாயாதேவி” என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு, அவருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.
விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிப்பில் “போடா போடி” படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி, அதன் பின்னதாக சர்க்கார், சண்டக்கோழி 2 என்ற பல படங்களில் நடித்து பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் தன் குடும்பத்தாரை வைத்து மட்டும் நிக்கோலை சச்தேவ் உடன் வரலட்சுமி அவர்கள் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று நிச்சயதார்த்தம் செய்து உள்ளார்கள். இவர்கள் திருமணம் இந்த வருடத்திற்குள் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
நிக்கோலை சச்தேவ் இவர் ஒரு கிளரிஸ்ட், கிளாரி 7 என்ற கண்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 14 வருடங்களாக குடும்பங்களுடனும் இவருடன் நல்ல நண்பர்களாக பழகி வந்த வரலட்சுமி தற்போது பெரிதாக யாரிடமும் சொல்லாமல் மிக எளிமையாக இரண்டு குடும்பத்துடன் இணைந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.
Actor Varalakshmi Sarath kumar and Gallerist Nicholai Sachdev got engaged in an intimate cermony in the presence of family and close friends held in Mumbai on the 1st of March#varalakshmi #Sarathkumar pic.twitter.com/aq203w3oUT
— IndiaGlitz – Tamil (@igtamil) March 2, 2024