நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிதா, இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியேற்றிய சம்பவம், பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதுவும் பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு பிரதீப் தான் காரணம் என்ற வகையில், அவர் மீது குற்றம் சாட்டி வெளியேற்றியது கமல் மீதும் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வனிதா விஜயகுமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,
பெண் பாதுகாப்பு என்றால் என்னவென்று கமல் சார் எனக்கு விளக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்று சட்டத்தில் பல விஷயங்கள் உள்ளது. சட்டம் எனக்கும் தெரியும். கமல்தான் இந்த பிரச்னையை ஆரம்பித்து வைத்தார். கமல்தான் இதை முடித்து வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் என் பொண்ணோட பேரை டேமேஜ் பண்றதை என்னால் ஏத்துக்க முடியாது.
என் பொண்ணுக்கு 18 வயது ஆகிறது. கமல் சார் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். என் பொண்ணு கேஸ் போடுவாள். இல்லை என்றால், பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்னையில், ஒரு பெற்றோரா நான் கேஸ் போடுவேன். என் பொண்ணோட கேரக்டர் எனக்கு நல்லா தெரியும். அவளை யாராவது விளையாட்டில் சீண்டினால், அதற்கு பதிலாக அவளுக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக செய்து விடுவாள். பிக்பாஸ் வீட்டுக்குள் வாராவாரம் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். மாயா, பூர்ணிமா எல்லோரது ஆட்டமும் ஒருநாள் மாறிப்போகும். சீக்கிரம் பூர்ணிமா வெளியே வந்துவிடுவாள், என்று கூறி இருக்கிறார் வனிதா விஜயகுமார்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…