#image_title
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில் புதுக்கவிதைகள் எளிதாக புழங்கத் தொடங்கியது. 7 முறை தேசிய விருது பெற்றிருக்கும் அவர் தற்போது இளம் பாடலாசிரியருடன் போட்டி போட்டு பாடல்களை எழுதி வருகிறார். இவர் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் முழு பாடல்களை எழுதுவதற்கு கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அவர் சமீபத்தில் கிழக்கு சீமையிலே படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்த பழைய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகின்றது. பாரதிராஜா இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கிழக்கு சீமையிலே. அண்ணன் தங்கை உறவை வையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வெளியானது.
இப்படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மாயாண்டி தேவராக விஜயகுமார், தங்கை விருமாயியாக ராதிகாவும், ராதிகாவின் கணவர் சிவனாண்டியாக நெப்போலியனும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா தனக்குரிய கிராமத்து பாணியில் சிறப்பாக இயக்கி இருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் .
பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் உருவான பாடல் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார் வைரமுத்து , அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “இந்த திரைப்படத்தில் இரண்டு நடிகர். ஒருத்தர் நெப்போலியன், இன்னொருத்தர் விஜயகுமார். மேக்கப் போடுவதற்கு மீசையோடு வந்தார்கள். இந்த ரெண்டு பேர் யார் யார் என்று கேட்டேன்? இரண்டு பேரும் மைத்துனர்கள்.
விஜயகுமாரின் தங்கை ராதிகா ராதிகாவை திருமணம் செய்து கொண்டு போபவர்தான் நெப்போலியன். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கேட்டேன். விஜயகுமார் நல்லவர் நெப்போலியன் கெட்டவர். மீசையை உற்றுப் பார்த்தேன் விஜயகுமார் மீசை நல்ல பெரிய மீசையாக இருந்தது. நெப்போலியன் மீசை கொடூர மீசையாக தெரிந்தது. அவ்வளவுதான் அப்படியே பாட்டு வரிகளை எழுத தொடங்கினேன்.
தங்கச்சி அண்ணனை பார்த்து பாட்டு பாடுகிறார். ‘அண்ணே போய் வரவா.. அழுது போய் வரவா.. மண்ணே போய் வரவா.. மாமரமே போய் வரவா.. அணில் வாழ் மீசை கொண்ட அண்ணே உன்ன விட்டு, புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய் வரவா”.. என்று எழுதியதாக கூறியிருந்தார். ஒரு மீசையை வைத்து ஒரு பாடலை உருவாக்க முடியும் என்றால் அது வைரமுத்துவால் மட்டும் தான் சாத்தியமாகும். தனது சிறப்பான வரிகளால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் வைரமுத்து.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…