#image_title
தமிழ் சினிமாவில் சில கலைஞர்கள் பணியாற்றினால் அவர்கள் மூலம் வெளிவரும் படைப்பு எக்காலத்துக்குமான பொக்கிஷமாக இருக்கும். அதில் தலைசிறந்த இணை என்று இளையராஜா- வைரமுத்து இணையை சொல்லலாம். இருவரும் இணைந்து பணியாற்றியது வெறும் 6 ஆண்டுகளே என்றாலும் அவர்கள் கொடுத்த பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பவையாக இன்றும் கொண்டாடப்படுகின்றன.
1980 ஆம் ஆண்டு தான் இசையமைத்த நிழல்கள் படத்தின் மூலம் வைரமுத்துவை அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அந்த படத்தில் அவர் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றன. அதன் பிறகு தனது படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்தார்.
இளையராஜா- வைரமுத்து- பாரதிராஜா ஆகிய மூவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் காலத்தால் அழியாதவையாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் படைப்பாளிகளுக்குள் எழும் தங்கள் படைப்பு குறித்த கர்வம் காரணமாக இளையராஜாவும் வைரமுத்துவும் 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிந்தனர். அதன் பிறகு எத்தனையோ பேர் அவர்களை சேர்த்து வைக்க முயன்றும் அது நடக்கவில்லை.
இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி இருவரும் இனிமேல் சேர வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ வைரமுத்து இரண்டு முறை இளையராஜாவோடு சமாதானம் ஆக இறங்கி வந்தார். முதல் முறை இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் திருமணத்துக்கு நேரில் வந்து தங்கச் சங்கிலி ஒன்றை அளித்து வாழ்த்தினார். ஆனால் அவரை இளையராஜா வரவேற்கக் கூட இல்லை.
அதன் பின்னர் இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்தபோதும் துக்கம் விசாரிக்க வைரமுத்து வந்தார். அப்போது இளையராஜாவின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல சென்றார். ஆனால் இளையராஜா வைரமுத்துவின் கையை உதறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு வைரமுத்துவும் தனது கௌரவத்தை விட்டுத்தர விரும்பவில்லை. அதன் பிறகு அவர் இளையராஜாவை சந்திக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
அதனால்தான் சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரணி இறந்தபோது கூட அவர் நேரில் செல்லாமல் சமூகவலைதளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டார்” எனக் கூறியுள்ளார். இதனால் இனிமேல் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…