Connect with us

கவிஞர் வைரமுத்துவையே வியக்க வைத்த பள்ளி மாணவி.. பாராட்டி அவரே வெளியிட்ட வீடியோ..!!

CINEMA

கவிஞர் வைரமுத்துவையே வியக்க வைத்த பள்ளி மாணவி.. பாராட்டி அவரே வெளியிட்ட வீடியோ..!!

புகழ்பெற்ற பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதலில் நிழல்கள் என்ற திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்னும் பாடலை எழுதினார். இவர் 5800 பாடல்களை எழுதி இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை ஏழு முறை வென்றுள்ளார்.

இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரகுமான் ஆகியோர் இசையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. வைரமுத்து கடந்த 1990-ஆம் ஆண்டு கலைமாமணி விருது, 2003-ஆம் ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது, கடந்த 2014-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

   

 

வைரமுத்து எழுதிய போறாளே பொன்னுத்தாயி, உயிரும் நீயே, முதல் முறை கிள்ளி பார்த்தேன், நெஞ்சில் ஜில் ஜில் ஜில், கள்ளிக்காட்டில் ஆகிய பாடல்கள் இன்றும் மக்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பள்ளி மாணவி ஒருவர் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் தேசிய கீதத்தை பாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் பள்ளி மாணவி சுபிக்ஷாவுக்கு பாராட்டுகள். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேசிய கீதங்களை பாடும் இவர் ஒரு உலககுயில் என பாராட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vairamuthu (@vairamuthuoffl)

author avatar
Priya Ram
Continue Reading
To Top