மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தி வருகிறேன். முல்லைப் பெரியாறு ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் பொது பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன். யாரோடு கூட்டு சேர்ந்தாலும் விஜய் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகும் ஆசை கனவு எனக்கு கிடையாது. நான் எப்போதும் முதல்வர் ஆவேன் என்று பேசியது இல்லை. திமுக தவெக இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களைப் போல மேடைகளில் விஜய் பேசி வருகிறார். விஜய்யின் கனவு ஒருபோதும் நனவாகாது. காகிதக் கப்பலில் கரையை கடக்க முயற்சிக்கிறார் விஜய். அது ஒருபோதும் கரை சேராது. ஆகாய வெளியில் மனக்கோட்டை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும். அவர் காணும் கனவு ஒரு நாளும் பலிக்காது என்று மதிமுக செயலாளர் வைகோ விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…