Connect with us

சொக்கத்தங்கம் படத்துக்கு பிரச்சனை கொடுத்த வடிவேலு & செந்தில்… பாக்கியராஜ் படாத பாடு பட்டார்- அதிர்ச்சி தகவலை பகிர்ந்த பிரபல நடிகர்!

CINEMA

சொக்கத்தங்கம் படத்துக்கு பிரச்சனை கொடுத்த வடிவேலு & செந்தில்… பாக்கியராஜ் படாத பாடு பட்டார்- அதிர்ச்சி தகவலை பகிர்ந்த பிரபல நடிகர்!

 

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

80 களில் இந்திய அளவில் பீக்கில் இருந்த பாக்யராஜ், 90 களில் தன்னுடைய மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். இதற்கு முக்கியக் காரணம் அவர் தன்னுடைய படங்கள் அனைத்திலும் தானே நடித்ததுதான். தனக்காகவே கதை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர் தன் திரைக்கதை ஞானத்தை குறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

   

இதனால் சில ஆண்டுகள் அவர் எந்த படமும் இயக்காமல் இருந்துவிட்டு 2004 ஆம் ஆண்டு சொக்கத்தங்கம் என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் வடிவேலுதான் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். அவருக்கு 3 லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் சரியான தேதிகளில் கால்ஷீட் கொடுக்காததால் அவருக்கு பதிலாக கவுண்டமணி செந்திலைக் கமிட் செய்துள்ளார் பாக்யராஜ். ஷூட்டிங் எல்லாம் முடிந்து டப்பிங் பேசும்போது சம்பள பாக்கி வந்தால்தான் டப்பிங் பேசுவேன் என செந்தில் மறுத்துவிட்டாராம். இதனால் வடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸை வாங்கி செந்திலுக்கு சம்பளமாகக் கொடுத்துள்ளனர்.

அப்போதும் செந்தில் “அவனுக்கு அட்வான்ஸே 3 லட்சம் ரூபாய். எனக்கு சம்பளமே 3 லட்சம்தானா. அவன் என்ன என்னை விட பெரிய ஆளா?” என பிரச்சனை செய்துள்ளார். அப்புறம் ஒரு வழியாக அனைவரும் பேசி அவரை சமாதானப் படுத்தி டப்பிங் பேச வைத்துள்ளனர். இந்த தகவல்களை பாக்யராஜின் உதவி இயக்குனரும், நடிகருமான செம்புலி ஜகன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
To Top