Categories: சினிமா

தான் புறக்கணித்ததால் சினிமாவில் உயர்ந்த 3 பிரபலங்கள்.. வியந்து பாராட்டிய கவிஞர் வாலி.. அந்த மூன்று பேர் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர். அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார்.  தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை.

இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றனர்.  வாலி  இயக்குனர் சங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் தொடங்கி அனைத்து படத்திலும் பாடல்களை எழுதியிருப்பார்.    இந்நிலையில் வாலி அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 1967 மற்றும் 68 காலகட்டத்தில் என்னிடம் உதவி இயக்குனராக சேர மூன்று பேர் முயற்சி பண்ணாங்க.
அதில் ஒருவர் நான் சினிமாவில் முன்னுக்கு வந்த காலத்திலிருந்து உங்களிடம் நான் உதவி இயக்குனராக சேர வேண்டும் என கிராமத்திலிருந்து விடாமல் கடிதம் எழுதுவார். மற்றொருவர் திருவல்லிக்கேணியில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார். நான் நன்றாக கவிதை எல்லாம் எழுதுவேன் உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று அவரும் கடிதம் எழுதினார். மற்றொருவர் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் பணியாற்றி வருகிறேன் எனக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசை உங்களுடன் நான் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று அவரும் என்னிடம் வந்தார்.
எனக்கு இடைவிடாமல் கிராமத்திலிருந்து லெட்டர் எழுதி வந்த அந்த நபர் சென்னைக்கு வந்து தன்னுடைய அயராத உழைப்பால் இசையமைப்பாளராக மாறி அவருக்கே நான் பாட்டு எழுதினேன் என்றால் அவர் தான் கங்கை அமரன். மற்றொரு நபர் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தாரே அவர் வளர்ந்து 100 படங்களுக்கு மேல் இயக்கினார். அவர்தான் ராமநாராயணன். இறுதியாக டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக இருந்த நபர் என்னிடம் எழுத்தாளராக பணியாற்ற வேண்டும் என்று கூறினாரே அவர் வளர்ந்து ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு டைரக்ட் பண்ணி இருக்காரு. அவர் தான் ஆர். சி. சக்தி என மூன்று இயக்குனர்கள் பற்றி வாலி பெருமையாக பேசியுள்ளார்.
Nanthini

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

3 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

4 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

9 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

16 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

22 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

24 minutes ago