சினிமாவை பொறுத்த வரையில் எந்த நடிகரின் படம் எப்போது ஹிட் அடிக்கும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் ஓடாமல் தோல்வியடையும். அந்தப் படத்தோடு வெளியான ஒரு சின்ன படம் சூப்பர் ஹிட் அடித்து விடும். ரசிகர்களுக்கு எது பிடிக்கின்றதோ அந்த படம் நன்றாக ஓடும். சமீபத்தில் கூட பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடவில்லை. ஆனால் சிறிய பட்ஜெட்டுகளில் உருவான குடும்பத்தார் மற்றும் டிராகன் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே நல்ல கதையும் ரசிகர்களை கவரும்படி திரைக்கதையும் இருந்தால் படம் ஓடும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் எடிட்டர் போன்ற துறைகளில் இருந்து இயக்குனராக பலரும் மாறி உள்ளனர். ஆனால் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆகிய அவதாரங்களை எடுத்து இயக்குனராக மாறிய ஒரே ஒரு பிரபலம் என்றால் அது கங்கை அமரன் மட்டுமே. அவர் இயக்கிய கோழி கூவுது திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் பிரபுவும் ராமராஜனும் ஹீரோவாக நடித்தார்கள்.
ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மயில் கல்லாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் சில திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஒரு வருடம் எல்லாம் ஓடியது. அதனைப் போலவே பிரபுவை வைத்து கோழி கூவுது, பொழுது விடிஞ்சாச்சு, கும்பக்கரை தங்கையா மற்றும் சின்னவர் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். அதில் கும்பக்கரை தங்கையா திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ரஜினியின் தர்மதுரை திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.
இதனால் கும்பக்கரை தங்கையா பட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். ரஜினி படத்தோட ரிலீஸ் செய்வதால் வசூல் இருக்காது என்று பயந்த அவர் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாம் என்று கங்கை அமரனிடம் கூறியுள்ளார். ஆனால் படத்தின் மீது நம்பிக்கை கொண்ட கங்கை அமரன் இந்த படம் கண்டிப்பாக ஓடும் தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்ல அவ்வாறே ரிலீஸ் செய்யப்பட்டு அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…