மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா தனது கடும் கவலையை பதிவு செய்துள்ளது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் துறைமுகங்களை முடக்க அமெரிக்கப் போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தக் கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்படாது என்ற டிரம்பின் அறிவிப்பு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சவுதி அரேபியா இதனைத் தந்திரோபாய ரீதியாக அணுகுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், ஈரான் அதற்குப் பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைத் தூண்டிவிட்டு, செங்கடலில் உள்ள ‘பாப் அல்-மண்டேப்’ ஜலசந்தியை முடக்கக்கூடும் என்று சவுதி அஞ்சுகிறது. சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த செங்கடல் வழித்தடம் மிக முக்கியமானது என்பதால், அமெரிக்காவின் தற்போதைய நகர்வு தங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பேரிடியாக அமையும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் சவுதி எடுத்துரைத்துள்ளது.
வரலாற்று ரீதியாகவே பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். ஏற்கனவே இஸ்ரேல் – காசா போரின் போது இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஹவுதிகள் பெரும் இடையூறு விளைவித்ததை உலகம் அறிந்தது. தற்போது ஈரானின் பொருளாதாரம் முடக்கப்பட்டால், அதற்குப் பழிவாங்க ஈரான் தனது நட்பு அமைப்பான ஹவுதிகளைப் பயன்படுத்திச் சர்வதேச வர்த்தகப் பாதையைச் செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. இது நிகழ்ந்தால், வளைகுடா நாடுகளின் வர்த்தகம் மட்டுமின்றி, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகமும் முற்றிலுமாகச் சீர்குலையும் சூழல் உருவாகும்.
தற்போது வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுடன், கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தனது பொருளாதார நலன்களைக் காக்க மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. போர் முனைப்பைத் தவிர்த்து, தூதரக ரீதியான தீர்வு காணப்படாவிட்டால், இரு முக்கிய ஜலசந்திகளும் முடக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் பெரும் மந்தநிலையைச் சந்திக்க நேரிடும் என்பதே தற்போதைய அரசியல் நோக்கர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…