தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்று வரும் சூழலில், பயனாளிகளின் விவரங்களை மறுசீரமைப்பு செய்து சரிபார்க்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிர்வாகப் பணிகள் மற்றும் தரவு சரிபார்ப்புகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிய தகுதியான பயனாளிகளை இணைப்பதற்கும் அரசு புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி, தற்போதுள்ள தரவுகள் சரிபார்க்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியானவுடன், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் வழியாகப் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதனால் மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் புதிய விண்ணப்ப விநியோகம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…