நகைக் கடனுக்காகப் பெறப்படும் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படாது என்ற முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒருவருடைய சொத்தை (தங்கத்தை) ஈடாக வைத்தே கடன் பெறப்படுவதால், அந்தத் தொகை அவரது வருமானமாகக் கருதப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கணக்கில் நகைக் கடன் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்போது வரி குறித்த கவலைத் தேவையில்லை.
இருப்பினும், ஒருவர் ₹10 லட்சத்திற்கு மேல் நகைக் கடன் வாங்கினால், அதற்கான முறையான ஆவணங்களைப் பராமரிப்பது அவசியமாகும். கடன் வாங்குபவர்கள் தங்கள் சொத்துக்கு ஈடாகப் பணத்தைப் பெறுவதால் இது வரி வரம்பிற்குள் வராது என்றாலும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளின் போது போதிய பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் கையில் இருப்பது நல்லது.
