புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கீங்களா..? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… செம குட் நியூஸ்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அதற்கு உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இதன் மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமன்றி, கூட்டுறவுத் துறை ஊழியர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.