Connect with us

விக்ரம்மின் அப்பாவும் ஒரு நடிகரா?… இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? – அட இதுவரை இது தெரியாம போச்சே!

CINEMA

விக்ரம்மின் அப்பாவும் ஒரு நடிகரா?… இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? – அட இதுவரை இது தெரியாம போச்சே!

 

தமிழ் சினிமாவில் இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அவர் நடிப்பில் விரைவில் தங்கலான் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதிகமாக மெனக்கெடுபவர். கெட்டப்புகளை மாற்றி உடல் எடையை ஏற்றி இறக்கி வருடக்கணக்கில் அர்ப்பணிப்புடன் நடிப்பவர்.

அதனாலேயே அவரால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது லீடிங் ஹீரோவாக இருந்தாலும் விக்ரம் இந்த நிலைக்கு மிக எளிதாக வரவில்லை. 1990 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம்தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

   

இடைப்பட்ட காலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பல படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். அஜித், பிரபுதேவா மற்றும் அப்பாஸ் போன்றவர்களின் ஆரம்பகால படங்களுக்கு விக்ரம்தான் டப்பிங் குரல் கொடுத்தார்.

#image_title

விக்ரம் பற்றி இன்று பலருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், அவரின் அப்பா வினோத் ராஜும் ஒரு நடிகர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் கில்லி மற்றும் திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் ராஜ் பரமக்குடியில் பிறந்தவர். இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. அதில் ஒருவர் தான் விக்ரம். வினோத் ராஜின் மனைவி ராஜேஸ்வரியின் சகோதரர்தான் நடிகர் தியாகராஜன். அவர் நடித்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில்தான் வினோத் ராஜ் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கொடி பறக்குது படத்திலும் ஒரு நல்ல வேடத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் சினிமாவுக்கு மிகப்பெரிய இடைவெளி விட்டார். அதன் பின்னர் அவர் நடித்த படம் கில்லிதான். அதில் திரிஷாவின் அப்பாவாக நடித்திருப்பார். அதன் பின்னர் திருப்பாச்சி, திருட்டுப் பயலே, மதராசி, தம்பி, மனதோடு மழைக்காலம், மாயக்கண்ணாடி, மச்சக்காரன், சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் விக்ரம்மோடு கந்தசாமி படத்தில் மட்டும் இணைந்து நடித்தார்.

அரவான் அவரின் கடைசிப் படமாக அமைந்தது. உடல் நலக் குறைவு காரணமாக 2017 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நடிகர்களாக இருந்த பெருமை விக்ரம் குடும்பத்துக்குப் பொருந்தும்.

Continue Reading
To Top