#image_title
டி.எம்.எஸ் பாடிய பல நூறு பாடல்களில் உள்ளம் உருகுதய்யா பாடலை கேட்டு உருகாத உள்ளங்களே இருக்க முடியாது எனலாம். இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்து பல காலங்கள் கடந்தும் கூட அதனை எழுதியது யார் என டி.எம்.எஸ்க்கு தெரியாதாம். ஒருமுறை டி.எம்.எஸ் பழநி சென்று அங்கு ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அங்கு வேலை செய்த சிறுவன் ஒருவன் உள்ளம் உருகுதய்யா பாடலை முணுமுணுத்தப்படி இருந்துள்ளான். அந்தப் பாடலில் மூழ்கிப் போனாராம் டி.எம்.எஸ். அத்தோடு அவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யமும் இருந்ததாம். ஏனெனில் அந்தப் பாடலை பாடிய சிறுவன் ஒரு இஸ்லாமிய சிறுவனாம்.
#image_title
அந்த சிறுவனை அழைத்து, இந்தப் பாடலை எழுதியது யார் என டி.எம்.எஸ் விசாரித்துள்ளார். ஆனால் அதனை அந்தப் பையனுக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை. சரி கஷ்டப்படாதே, முழு பாடலையும் பாடு என்றாராம். அச்சிறுவன் பாட பாட அந்த வரிகளை அப்படியே எழுத்திக் கொண்டாராம் டி.எம்.எஸ். பழநி வந்ததும், அச்சிறுவனிடம் இருந்து எழுதி வந்த பாடலில், அடா என்ற இடங்களில் எல்லாம் அய்யா என மாற்றிக் கொண்டாராம் டி.எம்.எஸ். அதனை பாடி பதிவிட்டும் கொண்டவர், கச்சேரிக்கு போகும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடல் உருவான விதத்தையும் மேடையிலேயே கூறியிருக்கிறார்.
#image_title
எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு. ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை. ஒருமுறை தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற டி.எம்.எஸ்., சாமி தரிசனம் செய்து விட்டு, கோயிலை சுற்றி வலம் அந்தப் போது, குறிப்பிட்ட இடத்தில் திகைத்து நின்றிருக்கிறார். காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் உள்ளம் உருகுதய்யா பாடல் செதுக்கப்பட்டு இருந்துள்ளது. உடல் எல்லாம் பரவசத்தில் நடுங்க, அந்தப் பாடலை எழுதியது யார் என பாடலின் அடியே பார்த்துள்ளார். அந்தக் கல்வெட்டில், ‘ஆண்டவன் பிச்சி’! என பொறிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’? என டி.எம்.எஸ் தேட ஆரம்பிக்க, நாளுக்கு நாள் தீவிரமாகியுள்ளது. அவரது தீவிர தேடலுக்கு பதில் கிடைத்துள்ளது. அந்தப் பாடலை எழுதியது ஆண்டவன் பிச்சி என்கிற பெண். மரகதவல்லி என்ற இயற்பெயர் கொண்டவர், பள்ளிக்கூடம் பக்கமே செல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருந்தவள், 9 பிள்ளைகளுக்கு தாயாகி அனைத்து சோதனைகளையும் சந்தித்தவள். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர். இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தாள் மரகதவல்லி.
#image_title
காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த, காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.
#image_title
அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்! அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது? டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..? இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…
பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசபுலேட்டி கவர்ச்சியான முறையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில் தற்போது லைகா ப்ரொடக்ஷனுக்கு சமமாக 700 முதல் 800 கோடி வரையிலான படங்களை தயாரிக்கின்றது பேஷன் ஸ்டுடியோ…
80,90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே…
தக்லைஃப் திரைப்படத்தை எடுப்பதற்கு அதிக நாட்களை மணிரத்தினம் எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான…
இயக்குனர் அட்லி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது கமலஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று…