இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட உலக தலைவர்கள் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, முதலீடு, தொழில் குறித்து பேசி உள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதனையடுத்து அங்கு ஆன்மீக சேவையில் ஈடுபட்டவர்களுடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். அவர்களது வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ரிஷி சுனக் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து ரிஷி சுனக் உலக தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…