விஜய் இமேஜை காலி செய்ய உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’… ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மென்ட்…. அறிவாலயத்தில் கசிந்த அதிர்ச்சித் தகவல்….!

Spread the love

தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது மிகக் கடுமையான அதிகாரப் போட்டியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரு இளம் தலைவர்களுக்கு இடையேயான அரசியல் யுத்தம் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அரசியல் மோதலின் அடுத்தகட்டமாக, வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தான் முதல்வர் விஜய்யின் அரசியல் இமேஜை உடைப்பதற்கான பிரதான ஆயுதமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தரப்பு நம்புகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் தற்பொழுது இடைத்தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் திமுகவுக்குப் பெரிய அளவில் இழப்பதற்கு எதுவும் கிடையாது என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே கூட்டணி கட்சிகள் விலகி சென்றுவிட்ட சூழலில், எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை கூடினாலும் சட்டசபையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. இருந்தாலும், இப்போதே முதல்வர் விஜய்யின் அரசியல் பிம்பத்தை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்தினால், அது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் தங்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்று உதயநிதி ஸ்டாலின் கருதுகிறார். இதற்காக அவர் அடுத்தடுத்த வியூகங்களை வகுத்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இடைத்தேர்தலில் தோற்றால், அது முதல்வர் விஜய்யின் அரசியல் இமேஜுக்குப் மிகப்பெரிய பின்னடைவாக மாறும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது. தவெக அரசு மீது மக்கள் தற்பொழுது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்க இந்த இடைத்தேர்தல் தோல்வியே சரியான காய் நகர்த்தலாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் நம்புகிறார். 6 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளில் வென்றால் கூட, அது தவெகவிற்கு மிகப்பெரிய அரசியல் சேதாரத்தை உண்டாக்கும் என எதிர்க்கட்சித் தரப்பு திட்டமிட்டு செயலாற்றுகிறது.

இதற்கான முதற்கட்டப் பணிகளை திமுக ஏற்கனவே தீவிரமாகத் தொடங்கிவிட்டது. திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக அன்பில் மகேஷை நியமித்து தேர்தல் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், அம்பாசமுத்திரம் தொகுதி பணிகளை அனிதா ராதாகிருஷ்ணன் முன்னின்று தீவிரமாக கவனித்து வருகிறார். முதல்வர் விஜய்யின் செல்வாக்கிற்குச் சவால் விடும் வகையில், மற்ற தொகுதிகளுக்கான வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் மிக ரகசியமாகவும் வேகமாகவும் நகர்த்தி வருகிறார். இதனால், வரவிருக்கும் 6 தொகுதி இடைத்தேர்தல் களம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

16 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

27 minutes ago

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

33 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

36 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

45 minutes ago