“அதிமுகவை ஓட விடணும்.. எடப்பாடி பழனிசாமி ஒரு முரட்டு அடிமை”… மேடையிலேயே சீறிய உதயநிதி…. அதிர்ச்சியில் இபிஎஸ் முகாம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். “பிரதமர் மோடியின் முரட்டு அடிமை யாரென்று கேட்டால் அது எடப்பாடி பழனிசாமி தான்” என்று விமர்சித்த உதயநிதி, வரும் தேர்தலில் அதிமுகவை அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்து, பழனிசாமியை ஓட விட வேண்டும் என்று தொண்டர்களிடையே ஆவேசமாகப் பேசினார்.

திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட உதயநிதி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் தற்போது 5-ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில், அடுத்த ஆட்சியில் அது 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அதிரடித் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அதன்படி, குடும்பங்களுக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும், அதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான டிவி, பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். அதிமுகவினர் பரப்பும் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தின் நிலை குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.

தனது உரையின் நிறைவாக, திருப்பத்தூர் வேட்பாளர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆகியோரை உதய சூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். “முதலமைச்சரின் மகனாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனாகவும் உங்களிடம் இந்த வாக்குகளைக் கேட்கிறேன்” என்று உருக்கமாகப் பேசிய உதயநிதி, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

53 seconds ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

39 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

44 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

46 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

49 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

59 minutes ago