சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை முதல்வராக்க விடமாட்டோம் என்று அமித்ஷா கூறியதற்கு, “நான் எப்போது முதல்வர் பதவி கேட்டேன்?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி, அமித்ஷா எப்போதும் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகக் கிண்டல் செய்தார்.
பாஜகவின் மிரட்டல்களுக்கு அடிபணியத் தாங்கள் அதிமுக கிடையாது என்றும், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உறுதியான திமுக என்றும் அவர் ஆவேசமாக கூறினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.
புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வெறும் காகித அட்டை போன்றவர்கள். லேசான காற்று அடித்தாலே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அமித்ஷாவின் உருட்டல்களுக்குத் தமிழக மக்கள் பணிய மாட்டார்கள். மீண்டும் ஸ்டாலினையே முதல்வராக்குவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார்.
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…