கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்தவர் பிரஜ்வல் (22). அதே பகுதியை சேர்ந்தவர்தான் சஹானா (21). இவர்கள் இருவரும் நலன கலைஞர்கள் என்பதால் சில சினிமா படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். இதனைத் தவிர திருமணம், திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து நடனமாடி வந்தனர். அதன்படி சமீபத்தில் துமகூரு மாவட்டம் அருகே நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூருக்கு புறப்பட்டனர். இரவு 11.30 மணி அளவில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நிலமங்கலம் அருகே பெங்களூரு குனிகள் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
இப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த லாரி இவர்களுடைய மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரித்த நிலையில் லாரி டிரைவர் கவனக்குறைவும் வேகமாக ஓட்டியதும் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…