அரசியல் கடமையா?… பாசப் போராட்டமா?… ஒரு தந்தையாக செல்வப்பெருந்தகை சந்தித்த தர்மசங்கடம்…!!!

By Rajeshwari on பங்குனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகளின் நிச்சயதார்த்தம் மற்றும் அரசியல் கடமைகளுக்கு இடையே பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். மார்ச் 3-ஆம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்திருந்த சூழலில், அன்று காலை முதலே ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை, மதியம் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் தொகுதி எண்ணிக்கையில் நிலவும் இழுபறியைத் தீர்க்க அவர் ஒருபுறம் தீவிரமாக முயன்று கொண்டிருந்த அதே வேளையில், மறுபுறம் அவரது மகள் அக்சயா பிரியாவின் திருமண நிச்சயதார்த்தம் அன்று மாலை 4 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. குடும்ப நிகழ்ச்சிக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தபோதிலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதி செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனுக்கும் அறிவாலயத்திற்கும் இடையே காரிலேயே பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தார்.

   

மேலும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடியான தருணத்தில், அவர் தனது தனிப்பட்ட வாழ்வையும் அரசியல் பொறுப்பையும் சமநிலையில் கையாள வேண்டிய அழுத்தத்திற்கு ஆளானார். மாலை 4 மணிக்கு நிச்சயதார்த்த விழா தொடங்கவிருந்த நிலையில், கடைசி நிமிடம் வரை அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டுவிட்டு, இறுதியில்தான் அவர் தனது மகளின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.