தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போகிறார்களா என்ற கேள்விக்கு, அது வெறும் யூகங்கள் மட்டுமே என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதேவேளையில், கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஊழல் மற்றும் கமிஷன் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்தி வருவதாக வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த திடீர் பாராட்டும், கூட்டணி குறித்த சூசகப் பதிலும் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும், தவெக – மதிமுக கூட்டணி உருவாவதற்கான அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
