மும்பை பாண்டுப் காப்பக வனப்பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய நீர் குழாய் மீது இரண்டு சிறுத்தைகள் அமர்ந்திருக்கும் இந்த காட்சிகள், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பான தூரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
https://www.instagram.com/reel/DcpzBWOIgbS/?utm_source=ig_web_button_share_sheet
இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளுக்கு அருகில் செல்வதையோ, புகைப்படம் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும், இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
