அகமதாபாத்தில் ரெடிமேட் மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட ஒரு குடும்பத்தில், நான்கு வயது சிறுமி மற்றும் மூன்று மாத பச்சிளம் குழந்தை என இரு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோசை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்குக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தற்போது அவரது பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, தோசை சாப்பிடாத மூன்று மாத பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளான். தாய்ப்பால் மூலமாகவே விஷம் கலந்த பாதிப்பு குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசாரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் அந்த ரெடிமேட் மாவு பாக்கெட்டைக் கைப்பற்றி ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த மாவில் நச்சுத்தன்மை கலந்திருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…