தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விஜய் தொடங்க உள்ளார்.
இந்நிலையில் கரூர் அசம்பாவிதத்தை போல இனி எப்போதும் நடந்து விடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் உருவாக்கப்பட்ட தொண்டர் அணிக்கான பயிற்சியை கடந்த சில நாட்களாக சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் நவம்பர் 23ஆம் தேதி பயிற்சி பெறும் தொண்டரணிக்கு விஜய் நேரடியாக அறிவுரை வழங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…