BREAKING: விஜய் பக்கா ப்ளான் இதுதான்… டெல்லி பயணத்தில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on தை 12, 2026

Spread the love

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. தவெக நிர்வாகிகள் பலரை டெல்லி வரவழைத்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பேருந்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரிடமும் விசாரித்தனர். இந்நிலையில் தான் வரும் 12ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான CBI விசாரணைக்கு விஜய் இன்று நேரில் ஆஜராகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். டெல்லி விமான நிலையம் முதல் CBI அலுவலகம் வரை, ரசிகர்கள் கூடி விடாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு 2 நாள்கள் விசாரணை நடைபெறும் எனவும், விசாரணையை முடித்து நாளை மாலை சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.