இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி…. செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவு…. தமிழக அரசியலில் புதிய புயல்…..!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் நாளை முதல் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது தவெகவின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தான் மீண்டும் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தவெகவின் குரல் இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிப்பதாகவும், விஜய்யின் இலக்கு தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக மாற்றுவதுதான் என்றும் அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

   

அதிமுகவில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய தன்னை, கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி நீக்கியதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். 234 தொகுதிகளிலும் விஜய் யாரைக் கை காட்டுகிறாரோ அவரே எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தை ஆளப்போவது தவெக தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

கோபிசெட்டிபாளையம் தொகுதி கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ-வாக இருந்த செங்கோட்டையன் தற்போது தவெக சார்பில் களமிறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்துப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், “மௌனம் வெற்றியின் அறிகுறி” எனத் தெரிவித்து தனது அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து வருகிறார்.