ரூ.2,000 கோடி நிலம்.. ரூ.206 கோடி திட்டம்.. ஒற்றைக் கடிதத்தால் தூக்கிய தவெக அரசு… விஜய் அரசின் அதிரடி முடிவு… பரபரக்கும் அரசியல் களம்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

சென்னை செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சுமார் 2,010 கோடி ரூபாய் மதிப்பிலான 91 ஏக்கருக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு நிலத்தை, கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு மீட்டெடுத்தது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், அந்தப் பிரம்மாண்டமான இடத்தில் சர்வதேச தரத்திலான மாபெரும் விளையாட்டு நகரம் ஒன்றை அமைப்பதற்காக 2026 பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 112 ஏக்கர் பரப்பளவில் சுமார் 206 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘ஆர்பிபி’ என்ற நிறுவனத்திற்கு முந்தைய அரசால் அதிகாரப்பூர்வமாகப் பணி ஆணையும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அமைந்துள்ள தவெக அரசு இந்த விளையாட்டு நகரத் திட்டத்திற்கான பணி ஆணையைத் திடீரென ரத்து செய்துள்ளது. எவ்வித முறையான நிர்வாகக் காரணங்களும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் இளைஞர் மேம்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டம், தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.