மத்திய அரசின் உரிய அனுமதியின்றி வெளிநாடு சென்ற விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோருக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தொழில் துறை அமைச்சரான கீர்த்தனா தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கல்வி சார்ந்த பணிகளுக்காகவும் அண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் விதிமுறைகளின்படி, அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் முன்கூட்டியே முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், அவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், தமிழக அமைச்சர்கள் இருவரும் இந்த விதிகளைப் பின்பற்றாமல், தங்களது சொந்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விதிமீறல் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, உரிய அனுமதி பெறாமல் சென்றது குறித்தும், சொந்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சூழலில், மத்திய அரசின் இந்த அதிரடி நோட்டீஸ் நடவடிக்கை தவெக அமைச்சர்களுக்கும், தமிழக அரசுக்கும் புதிய குடைச்சலையும் நிர்வாக ரீதியிலான சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…