தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதோடு எளிதாகப் பெரும்பான்மையை எட்டிவிடலாம் என விஜய் தரப்பு கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெக உடனான கூட்டணிக்குத் தங்களது ஆதரவை ரகசியமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் திருப்பங்கள் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன.
