vijay

“என் அன்புத் தங்கைகளே”.. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..!

By Nanthini on மார்கழி 30, 2024

Spread the love

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு குரலை செய்து வருகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு: இதுவரை நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம் - BBC News தமிழ்

   

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், அன்பு தங்கைகளை, தமிழகத்தில் கல்வி வளாகம் முதல் கொண்டு ஒவ்வொரு நாளும் தாய்மார்கள், என் அருமை தங்கைகள் மற்றும் பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் போன்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்.

   

Thalapathy Vijay BREAKS Silence On Quitting Tamil Films For Politics: 'Thrown Away My Career, Salary...' - News18

 

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் ஆணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Vijay