நீதிமன்றம் அதிரடி உத்தரவு… விஜய் கட்சிக்கு கிடைத்த புதிய வெற்றி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்தது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கரூர் விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் துயர வழக்கில் சிறையில் உள்ள TVK நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. கரூர் நீதிமன்ற வளாகத்தில் TVK நிர்வாகிகள் மற்றும் மதியழகன் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சிறையில் உள்ள இருவரும் இன்று வெளியே வர உள்ளனர். இதனிடையே பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் TVK வழக்கறிஞர் சீனிவாசன் உடன் செல்போனில் பேசியுள்ளார். முன்னதாக SC வழக்கிலும் TVK வெற்றி பெற்று இருந்தது.