கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினரும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் TVK பொதுச்செயலாளர் N. ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். விஜயின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் இருவருக்கும் முன்ஜாமின் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் இருக்கும் அவர்களை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேமானந்தம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
