தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவருக்குச் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரபு என்பவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடத் தனது பெயரில் 120 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும், நேர்காணலுக்குக் கூடத் தன்னை அழைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமையின் இந்த அணுகுமுறை நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
