“விஜய் ஆட்சி அமைத்தது எங்க பிச்சையால தான்”…. அறிவாலயக் கூட்டத்தில் வெடித்த ஸ்டாலின்… அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!

By Nanthini on வைகாசி 14, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். தோல்விக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், “சூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது; அது மீண்டும் உதித்தே தீரும், சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது” எனத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததற்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவே காரணம் என்று விமர்சித்தார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தனது பலத்தை நிரூபிக்கப் போராடிய நிலையில், திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் அளித்த ஆதரவால்தான் தவெக ஆட்சி தப்பித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

   

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, 108 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்தாலும், முதல்வர் தனது திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ததாலும், ஒரு தொகுதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும் அதன் பலம் 106 ஆகக் குறைந்தது. இக்கட்டான இந்தச் சூழலில் காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததால் தவெகவின் பலம் 119 ஆக உயர்ந்தது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் இந்த ஆதரவு தவெக ஆட்சி நீடிக்க உயிர்நாடியாக அமைந்துள்ளது.

   

நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து, அக்கட்சி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும், தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்பதைத் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்த மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.