‘உன்னை இங்கேயே போட்டுருவேன்”… வயிற்றில் செல்போனால் குத்தினார்… அமைச்சர் சேகர் பாபு செய்த காரியம்… தவெக சினோரா அசோக் கண்ணீர் மல்க பேட்டி….!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே நிலவி வந்த அரசியல் மோதல், வாக்குப்பதிவு நாளன்று வன்முறையாக வெடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமைச்சர் சேகர் பாபுவுக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கும் இடையே கடுமையான வார்த்தை போர்கள் நிலவின. தனது குடும்பத்தினருக்கு அமைச்சர் தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருவதாக சினோரா அசோக் ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தேர்தல் களத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான பகை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடையச் சில நிமிடங்களே இருந்த சூழலில், மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களுடன் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர். இந்த மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் விரைந்து வந்து இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விலக்கி வைத்தனர். அமைச்சரும் ஒரு வேட்பாளரும் நேரடியாகச் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த மோதலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சினோரா அசோக், அமைச்சர் சேகர் பாபு தன் மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்தியதாக அதிரடி புகாரை முன்வைத்தார். கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வழக்கறிஞர் விஜயகுமாரைத் தாக்க முயன்றதாகவும், அதனைத் தட்டிக்கேட்ட தன்னை “இங்கேயே போட்டுவிடுவேன்” என மிரட்டி, தனது வயிற்றில் செல்போனால் நான்கு முறை குத்தியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், பல வாக்குச்சாவடிகளை அமைச்சர் தரப்பினர் கைப்பற்ற முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.