தமிழக வெற்றிக் கழகத்தின் பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திர காண்டீபன் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்தத் தகவல்கள் பொய்யானவை என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அரசியலில் இதுபோன்ற சவால்கள் இயல்பு என்றும், தான் மக்களிடம் உண்மை நிலையை விளக்குவதாகவும் கூறி கட்சித் தலைவர் விஜய் தனக்கு ஆறுதல் அளித்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் .
சந்திர காண்டீபன் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்றும், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கறிஞரைத் தாக்கியதற்காகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இதுபோன்ற சர்ச்சைகள் தவெக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
