சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஜீவிதா. திருமகள், ஆபீஸ், தேவதை மற்றும் பாசமலர் என பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக திருமகள் தொடரில் ஆனந்தவல்லி என்ற வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தால். அதன்பிறகு சத்யராஜ் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் வில்லிரோலில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் நடிகை ஜீவிதா சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். பொதுவாக தனக்கு கிளாமர் நூலில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் அரைகுறை ஆடையோடு நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வருவதால் அதனை மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். என்னை பார்த்தால் என்ன தோணும் என்று எனக்கு தெரியல, அரைகுறை ஆடை அணிந்து கிளாமர் ரோல் இருக்கு நடிக்கிறீங்களா என்று கேட்கிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், சில வருடங்களுக்கு முன்பு மாசாணி என்ற திரைப்படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். படத்தில் முழுக்க முழுக்க கிளாமர் ரோல் என்று கூறினார்கள். அந்த கேரக்டருக்கு காஸ்டியூம் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என்றும் அது நமீதா நடிக்க வேண்டிய ரோல் என்றும் சொன்னார்கள். அப்படி என்றால் எதற்கு என்னை அழைக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். புது முகங்களை தேடுகிறோம் அதனால் தான் உங்களை அழைக்கிறோம் என்று சொன்னார்கள். சரி நமீதா நடிக்க வேண்டிய ரோல் என்றால் அவருக்கு கொடுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளத்தை எனக்கு கொடுத்து இருக்க வேண்டுமே. ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் தருவதாக சொன்னார்கள்.
எதற்கு நான் அந்த ரோட்டில் நடிக்க வேண்டும் என்று யோசித்தேன். நமீதா நடிக்க வேண்டிய ரோலை உனக்கு கொடுக்கிறேன் ஆனால் சம்பளம் மட்டும் பிச்சைக்காரத்தனமாக கொடுப்பேன் என்றால் அங்கு ஏதோ தப்பா இருப்பதாக எனக்குத் தோன்றியது. உண்மையிலேயே அது ஒரு முக்கியமான ரோலாக இருந்திருந்தால் அவருக்கு வழங்க வேண்டிய அதே சம்பளத்தை கொடுத்து என்னை அவர்கள் அழைத்து இருக்க வேண்டும். அப்படி மறுக்கிறார்கள் என்றால் ஏதோ தப்பு இருப்பதாக நினைத்து நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன் என்று ஜீவிதா பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…