சென்னையில் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கடத்தி சென்ற வழக்கில், அந்த நிறுவனத்தின் ஊழியரே தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது அம்பலமாகியுள்ளது. மும்பையிலிருந்து விமானம் மூலம் வந்த தங்க பார்சலைச் சவுக்கார்பேட்டைக்கு எடுத்து சென்ற போது, கிண்டி மேம்பாலத்தில் சிலர் தங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் என்று கூறி மிரட்டி பறித்து சென்றுள்ளனர். உரிமையாளர் ராவல்சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த நிறுவன ஊழியர் ஜிதேந்தர் குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், ஜிதேந்தர் குமார் தனது பள்ளி நண்பன் தன்ராஜ் சர்மா மற்றும் சிலருடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது. ஜிஎஸ்டி அதிகாரிகள் போல நடித்துத் தங்கத்தை அபகரித்த கும்பல், நகைகளுடன் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளை ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். சக ஊழியரே விசுவாசமாக இருப்பது போல நடித்துப் பெரும் திருட்டில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர், தங்களுக்குத் தெரிந்த பெண்ணை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி,…
குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள நவசாரி மாவட்டத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்…
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அண்டை…
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில்…