நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்..!. “ஒரு MLA வுக்கு 100 கோடி” விஜய் கொடுத்தது போலி கடிதம்… தமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பிய டிடிவி..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறி வருகிறது. விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளதால், தவெகவின் பலம் 107 ஆகக் குறைந்து, மெஜாரிட்டிக்கு இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் (5) மற்றும் கம்யூனிஸ்ட் (4) கட்சிகள் ஆதரவு அளித்தாலும், இன்னும் 2 இடங்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை ரூ.100 கோடி பேரம் பேசி தவெக நிர்வாகிகள் கடத்திச் சென்றதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து எம்எல்ஏ காமராஜ் அளித்த அசல் கடிதத்தை ஒப்படைத்தார். “புதுச்சேரியில் இருந்து தனது உதவியாளர் மூலம் காமராஜ் அனுப்பிய அசல் கடிதத்தில் நானும் கையெழுத்திட்டு ஆளுநரிடம் வழங்கிவிட்டேன்; ஆனால் அதற்குள் காமராஜ் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக ஒரு போலி கடிதத்தை விஜய் தரப்பு ஆளுநரிடம் கொடுத்துள்ளது” என்று தினகரன் குற்றம் சாட்டினார். இது அப்பட்டமான ‘போர்ஜெரி’ வேலை என்றும், எம்எல்ஏவின் கையெழுத்து மற்றும் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆளுநர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

   

தூய்மையான அரசியல் என்று பேசிவிட்டு, முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் குதிரை பேரத்திலும், ஆள் கடத்தலிலும் விஜய் ஈடுபடுவது முறையா? என தினகரன் கேள்வி எழுப்பினார். எம்எல்ஏ காமராஜின் செல்போன் பறிக்கப்பட்டு அவர் சிறைவைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள அவர், திமுக அணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தவெகவிற்கு ஆதரவு அளிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் சாடினார். ஆளுநரிடம் இருவேறு தரப்பிலிருந்தும் ஆதரவு கடிதங்கள் சென்றுள்ளதால், விஜய்யின் பதவியேற்பு கனவு இப்போது சட்டச் சிக்கல்களிலும், மர்மமான கடத்தல் புகாரிலும் சிக்கித் தவிக்கிறது.