ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் பகுதியாக யூரேனியத்தைச் செறிவூட்டும் பணியைத் தீவிரப்படுத்தியது. இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா முயன்ற நிலையில், கோபமடைந்த ஈரான் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடி சீல் வைத்தது. இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்து, இரு தரப்பும் பரஸ்பரம் சரமாரித் தாக்குதல்களில் ஈடுபட்டன. உலக நாடுகளின் தலையீட்டால் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், அது விரைவில் முடிவுக்கு வந்து மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக 13 நாட்கள் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் அங்குப் போர் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. ஓமன் நாட்டின் பிரதிநிதிகள் குழு ஈரானுக்குச் சென்று இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதைக் கருத்தில் கொண்டே, அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு தாக்குதல்களை நடத்த அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தற்காலிகப் பின்வாங்குதலுக்குப் பேச்சுவார்த்தை மட்டும் காரணமல்ல என்றும், அமெரிக்காவிடம் ஏற்பட்ட ஆயுதப் பற்றாக்குறையே முதன்மைக்காரணம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருவதாகப் பென்டகன் எச்சரித்திருந்ததைச் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், ஆயுதப் பற்றாக்குறை காரணமாகவே அமெரிக்கா தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து ஒரு…
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய…