ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியில் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களிலும் நடைபெற உள்ளது.
தேர்வுகள் மற்றும் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் அனைத்தும் தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவர்கள் இன்று முதல் அவர்களுடைய User ID மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைதீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
