தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நடைபெற உள்ள அம்மன் கோவில்கள் பயணம் ஐந்து கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணங்கள் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து தொடங்க உள்ளது. இந்த ஆன்மீக பயணத்திட்டம் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்ட இந்து மதத்தை சேர்ந்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பதற்காக நான்கு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணங்களுக்கு சிறப்பு பேருந்துகள், ஆன்மீக வழிகாட்டிகள், இலவச உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் tnhrce.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தங்களுக்குரிய மாவட்டத்தில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…