VAO ஒருவர் திருநங்கைகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.ஏ.ஓ. ராஜாராமன் (37). இவர் லஞ்ச வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நவ.07ம் தேதி விசாரணைக்காக சென்று விட்டு பின்னர் வீடு திரும்பியபோது, செல்லூர் கடற்கரை சாலையில் தலையில் காயங்களுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையில், ராஜாராமனை திருநங்கைகள் நிவேதா மற்றும் ஸ்ரீகவி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்தது, பணம் மற்றும் பொருள்களை பறித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
