“மரணப் பாதையாக மாறுகிறதா ரயில் தண்டவாளங்கள்?”…. ஒட்டகங்களின் பரிதாப நிலை… கடைசியில் நடந்த விபரீத முடிவு… வைரலாகும் கலங்க வைக்கும் காட்சி?…!!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் அருகே உள்ள ஸ்ரீ பாதரியா-லாத்தி ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒட்டகங்கள் மீது ரயில் மோதியதில் ஆறு ஒட்டகங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. திங்கள்கிழமை காலை நடந்த இந்த கோர விபத்தில், அதிவேகமாக வந்த ரயில் மோதிய வேகத்தில் ஒட்டகங்களின் உடல்கள் சிதறி அப்பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.

இந்த துயரமான சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இந்த விபத்தையடுத்து, உள்ளூர் சமூக ஆர்வலர் முகேஷ் பில் தலைமையில் திரண்ட கிராம மக்கள், உயிரிழந்த ஒட்டகங்களுக்கு உரிய பிரேதப் பரிசோதனை செய்யவும், பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ரயில் பாதையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள மக்கள், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தண்டவாளத்தின் ஓரங்களில் வேலி அமைக்க வேண்டும் அல்லது ரயில்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Rajeshwari

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

2 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago