விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
![]()
போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ரயான் பைனலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு கொண்டுவர இருக்கிறார்கள். அந்தவகையில் வீட்டிற்குள் சுனிதா, வர்ஷினி, ரவீந்தர், ஆர்னவ், சிவா ஆகியோர் வந்துள்ளார்கள்.

தற்போது ஒரு புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சிவா ஒவ்வொருவோருக்கும் ஒரு வரியில் சொல்லி கடுமையாக பேசியுள்ளார். அதாவது விஷாலுக்கு லவ் கன்டென்ட், ஜாக்குனிலுக்கு கிளாப் வர வர friends மாத்துறீங்க என்று பேசுகிறார். இதனையடுத்து வர்ஷினி இந்த வாரம் midweek எவிக்ஷன் இருக்கு. அதை செய்யப்போறது நாங்க 8 பேரு தான் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
View this post on Instagram
