இன்றைய ராசிபலன்(7.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணமழை கொட்டும், திருமணம் கைகூடும்..!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

இன்றைய ராசிபலன் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்: உத்தியோகஸ்தர்களுக்கு தாங்கள் பணிபுரியும்  இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தலைவிகளுக்கு தங்கள் மகள் திருமணத்திற்கான சேர்த்து வைத்து சேமிப்பு தொகையை நகைகளாக வாங்குவார்கள்.

   

ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளும் இருக்கும்.   உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளனும்.

   

மிதுனம்: பணவரவுக்கு பஞ்சமில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு சிறு முதலீடு செய்வார்கள். குடும்பத்தலைவிகளுக்கு தங்களுடைய பிள்ளைகளின் உடல் நலனை பற்றிய கவலை வந்து போகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

 

கடகம்: உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு.  மாமனார் வகை உறவினர்கள் வந்து போவார்கள்.

சிம்மம்: தம்பதிகளுடைய அன்பு மமேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். திருமணமாகாத பெண்கள் தங்கள் உறவிலேயே திருமணம் நடக்கும். சுயதொழில்  செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் .உடல் நலலின் அக்கறை தேவை.

கன்னி: சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

துலாம்: இன்று  சந்திராஷ்டமம் என்பதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .யாரிடமும் நீங்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது. மன குழப்பம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

விருச்சிகம்: கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கணவன் வீட்டார் ஆதரவு கொடுப்பார்கள். சகோதர சகோதரிகள் உதவி புரிவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.